பதிவு செய்த நாள்
25
செப்
2018
12:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, தேர்நிலையத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற நவநீத வேணுகோபால்சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குளம் உள்ளது. இதை, கடந்த, 50 ஆண்டுகளாக பராமரிக்காததால், மண் மூடி, செடிகள் முளைத்து, புதர் மண்டியது. கிருஷ்ணகிரி ஆதி சேஷ நாகராஜா சேவா சமிதி டிரஸ்ட் சார்பில், இக் குளத்தை தூர்வார முடிவு செய்யப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், முட்புதர்களை அகற்றி, கற்களை ஒழுங்குபடுத்தி, குளத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.