மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி, ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. ஐந்து கருட சேவையில் மதனகோபாலசுவாமி, வியூகசுந்தரராஜர், கூடலழகர், ரங்கநாதர், வீரராகவ பெருமாள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.