முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே வெண்ணரீவாய்க்கால் கிராமத்தில் முளைப்பாரி திருவிழாவை முன்னீட்டு கிராமமக்கள் பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்தனர். விநாயகர் கோயிலில் எடுத்த முளைக்கொட்டு திண்ணை வழியாக வாழவந்த அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான கிராமமக்கள கலந்து கொண்டனர்.
செல்வநாயகபுரத்தில் கிராமமக்கள் கலந்து கொண்டு செல்வியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கொண்டாடினர் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மொச்சிக்குளத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அரியநாச்சியம் மன் கோயிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது. கிராமத்தில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில் இருந்து ஊர்வலமாக பால்குடம் தூக்கி சென்றனர்.
பின்னர் கிராமமக்கள் மாவிளக்கு மற்றும் ஆயிரங்கண் பானை தூக்கி நேர்த்திகடன் செலுத்தினர். கொல்லங்குளம் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா கொண்டாப்பட்டது.
கிடாத்திருக்கை கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.கிராமமக்கள் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். கீரனூர் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.
சித்திரங்குடியில் உலகநாயகி அம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா நடைபெற்றது. விநாயகர் கோயிலில் இருந்து சீலைக்காரி அம்மன் கோயில் வழியாக பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சிறுவர்,சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தினர். கதையன் கிராமத்தில்பத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா நடைபெற்றது. பருத்தி குளம் கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.