நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, அன்று மாலை 4:00 மணிக்கு விநாயகர், ராஜ ராஜேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரர், சுப்ரமணியர், நால்வர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் அடிவாரத்தை 16 முறை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 8:30 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.