Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் கோயிலில் பூந்தட்டு ஊர்வலம் திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவிலில் நாளை தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
11:02

சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா ஜனவரி 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. சென்னிமலை மலைக்கு மேல் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர் பெருவிழா 15 நாட்கள் நடக்கும். இம்மலையில் தான் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்துள்ளது. பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்திருவிழா நடப்பதுபோல, இங்கும் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், இரவு 9 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும் நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது. நாளை அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்குள் மகர லக்னத்தில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8ம் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. 9ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சியும், பத்தாம் தேதி இரவு தெப்போற்சவமும், பூத வாகன காட்சியும் நடக்கிறது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனம் 11ம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. மகாதரிசனம் அன்று நடராஜபெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. அன்று சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 12ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. தினமும் இரவில் பல்வேறு இசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் தனபாலன், கோவில் செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (20ம் தேதி) ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் ... மேலும்
 
temple news
சென்னை; மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக ... மேலும்
 
temple news
பல்லடம்; அப்டேட் செய்யப்படாத அறநிலையத்துறை இணையதளத்தால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar