பதிவு செய்த நாள்
27
செப்
2018
12:09
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்க, கோபால யாகம், நேற்று (செப்., 26ல்) நடந்தது.
முரளிதர சுவாமிகள் நடத்தினார். தொடர்ந்து, கலா பார்வதி யாகம், கர்தர்வ ராஜ ஹோமம், கலசாபிஷேகம், கேதுவுக்கு அன்னதோஷம் விலகவும், உணவு செரிமானம் ஏற்படவும் அன்னாபிஷேகம், 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகள், சத்திய நாராயண ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.