Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ... மேட்டுப்பட்டி கிராமத்தில், பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் ஜோதிடர் ஆரூடத்தால் திரண்ட மக்கள் மேட்டுப்பட்டி கிராமத்தில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் இன்று (செப்., 27ல்) ஸ்ரீபெரும்புதூர் வருகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2018
12:09

ஸ்ரீபெரும்புதூர்: வேதாந்த தேசிகனின், 750வது திரு அவதார விழாவை முன்னிட்டு, திருவள் ளூரில் இருந்து வீரராகவப் பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் எழுந்தருளும் நிகழ்வு இன்று (செப்., 27ல்) நடைபெறுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் வேதாந்த தேசிகன் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் திரு வோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகனின் அவதார தினம். இந்தாண்டு வேதாந்த தேசிகனின், 750 ஆண்டு திரு அவதார மஹோர்சவம் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஸ்ரீபெரும்புதூர் எழுந்தருளும் நிகழ்வு இன்று (செப்., 27ல்) நடைபெறுகிறது.

கும்ப மரியாதை : திருவள்ளூரில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன் புறப்பட்ட வீரராகவ பெருமாள், மணவாள நகர், செங்காடு, மண்ணூர், தொடுகாடு, ஆயக்கொளத்தூர் வழியாக, இன்று (செப்., 27ல்) காலை ஸ்ரீபெரும்புதூர் வந்தடைகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் ஊர் எல்லைக்கு வீரராகவபெருமான் வருவதற்கு முன்னதாகவே, அவரை எதிர்கொள்ளும் வேதாந்த தேசிகன், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கிறார்.அதன் பின், ஸ்ரீபெரும்புதூர் வீதிகளில் புறப்பாடு கண்டருளி, காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ அஹோபில மடத்திற்கு, வீரராகவ பெருமாள் எழுந்தருளுவார்.

பக்தர்களின் பொது தரிசனத்திற்கு பின், காலை, 9:30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மாட வீதிகளில் திருவாபரண திருமேனியுடன், வேதபாராயணம் மற்றும் தேசிக ஸ்தோத்ரங்கள் பாராயணங் களுடன் புறப்பாடு கண்டருளி, 11:00 மணிக்கு, வேதாந்த தேசிகர் கோவிலை சென்றடைவார்.

அங்கு பகல், 1:00 மணிக்கு, வீரராகவப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்ஜனம் நடைபெறும்.
இரவு, 7:30 மணிக்கு, திருப்பாவை சாற்றுமறை நடைபெறும். 9.30 மணிக்கு, பெரிய மாட வீதிகளில் ராமானுஜ நூற்றாந்தாதி மற்றும் யஜீர், சாம வேத பாராயணங்களும், விசேஷ நாதஸ்வர, வாண வேடிக்கையுடன் கூடிய புறப்பாடும் நடைபெறும்.

(செப்., 29ல்) சனிக்கிழமை அதிகாலை, 2:30 மணிக்கு, திருவாய் மொழி சாற்றுமறை நடை பெறும். அன்று காலை, 4:00 மணிக்கு புறப்பாடு கண்டருளி, ஸ்ரீபெரும்புதூர் ஊர் எல்லையில், வீரராகவப் பெருமாளுக்கு பிரியாவிடை நடைபெறும்.

750 பழங்கள் அதன் பின், வீரராகவப் பெருமாள் திருவள்ளூர் கோவிலை சென்றடைவார். வேதாந்த தேசிகனின், 750ம் ஆண்டு திருஅவதார விழாவை முன்னிட்டு அனைத்து வகையான பழங்களையும்,750 எண்ணிக்கையில் வைத்து வழிபடும் நிகழ்வும் இன்று (செப்., 27ல்) நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar