செல்லியம்மன் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2018 11:10
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. நெல்லிக்குப்பத்தில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட செல்லியம்மன் கோவிலில் வராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை பஞ்சமியில் வராகி அம்மனை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. மிளகாய்களை போட்டு யாகம் செய்தனர். மூலவர் வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ராமு, முருகன் குருக்கள் செய்தனர்.