பதிவு செய்த நாள்
01
அக்
2018
02:10
ஓசூர்: ஓசூர் பகுதியில், புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாவில், புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவில்களில், நேற்று (செப்.,30ல்) சிறப்பு பூஜை நடந்தது. சூளகிரி அடுத்த, கோபசந்திரம் திருப்பதி வெங்கடரமண சுவாமி கோவில், கெலமங்கலம் சென்னகேஸ்வர சுவாமி, தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில், தளி வேணுகோபால சுவாமி கோவில், சூளகிரி வரதராஜ சுவாமி கோவில், பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி, ஓசூர் மலை மீதுள்ள வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று செப்., 30ல் சிறப்பு பூஜைகள், அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தன.
* தர்மபுரி அடுத்த, செட்டிக்கரை சென்றாயபெருமாள் சுவாமி கோவிலில், நேற்று (செப்.,30ல்) காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. கோவில் உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூக்கனூர் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பழைய தர்மபுரி அடுத்த, முத்துப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோவில், அதகபாடி லஷ்மி நாராயணசுவாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிகோவில் உட்பட, பல்வேறு பெருமாள் கோவில்களில், நேற்று (செப்.,30ல்) சிறப்பு பூஜை நடந்தது.