பதிவு செய்த நாள்
03
அக்
2018
11:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா, வரும், 10ல் துவங்கி வரும், 19 வரை நடக்கிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு வரும், 10ல் நவராத்திரி துவங்குகிறது. இதை முன்னிட்டு, அன்றிரவு, 8:00 மணிக்கு, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் அருள்பாலிக்கிறார். 11ல், ராஜராஜேஸ்வரி, 12ல், கெஜலட்சுமி, 13ல், மனோன்மணி அலங்காரம், 14ல், ரிஷப வாகனத்தில் எழுந்தருளுதல் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. வரும், 15ல், ஆண்டாள், 16ல், சரஸ்வதி, 17ல், லிங்க பூஜை, 18ல், மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் நடக்கிறது. அன்று மாலை உண்ணாமுலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. நிறைவாக, 19ல் விஜயதசமி அன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில், பராசக்தி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் அபி?ஷகமும் நடக்கிறது.