பதிவு செய்த நாள்
03
அக்
2018
11:10
தர்மபுரி: தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சாம்பல் பூசணியில் தீபமேற்றி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு, அஷ்ட பைரவ யாகம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு யாகங்கள் நடந்தன. பின், தேங்காய், பூசணி, எலுமிச்சை உட்பட, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. வெள்ளிக் கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு மூலவர் அருள்பாலித்தார். இரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், சாம்பல் பூசணி தீபமேற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.