பதிவு செய்த நாள்
03
அக்
2018
12:10
தலைவாசல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. புரட்டாசி தேய்பிறை அஷ்டமி, சம்புகாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதலே, பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு அபி ?ஷகம் நடந்தது. ஐந்து வகை எண்ணெயால், பஞ்ச தீபமேற்றி, பைரவருக்கு உகந்த செவ்வரளிப்பூவை வைத்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, எட்டு பைரவர்களுக்கு, தனித்தனியாக பூஜை நடந்தது. காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
* உலக நன்மை வேண்டி, ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத்தில், யாக குண்டத்தில், வற்றல் மிளகாய், சன்னவதி (98 வகை மூலிகை) வேள்வி உள்ளிட்ட பூஜை நடந்தது. பிரித்தியங்கிராதேவி அம்மனுக்கு, கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் மற்றும் சொர்ண பைரவர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஆயுள் விருத்தி, தாய் தந்தையருக்கு செய்த அபவாதங்கள் விலக வேண்டி, சம்புகாஷ்டமியில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.