பதிவு செய்த நாள்
05
அக்
2018
12:10
சென்னை:சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதித்தது மற்றும் கள்ள உறவு குற்றமல்ல என்ற, தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, மூத்த வழக்கறிஞர், ஞானதேசிகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஆதார் அட்டை செல்லுமா, செல்லாதா; ஓரின சேர்க்கை; அயோத்தி வளாக த்தில் மசூதி; திருமண வளையத்தை தாண்டிய உறவுகள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி என, வரிசையாக தீர்ப்புகள் வந்துள்ளன.இந்த தீர்ப்புகளால், சமூக கட்டமைப்பு சிதைந்து விடுமோ என்ற, பயம் எழுகிறது.
ஓரின சேர்க்கையும், திருமண வளையத்தை தாண்டிய உறவுகளும், கிரிமினல் குற்றம் அல்ல என்ற, சட்டப்பிரிவுகளை நீக்காவிட்டால், ஒழுக்கம் சிதைந்து விடும்; குடும்ப உறவுகள் அறுந்து விடும்.கொலை செய்தால் சிறையுண்டு என்பதால் தான், கொலை சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன; இல்லையேல், தெருவுக்கு தெரு கொலைகள் நடக்கும்.இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து, 377, 497வது பிரிவுகள் அகற்றப்பட்டால், ஏற்படும் விளைவு களை நினைத்தால் கவலை அளிக்கிறது. இந்த தீர்ப்புகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய, மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, ஞானதேசிகன் கூறியுள்ளார்.