பதிவு செய்த நாள்
05
அக்
2018
12:10
வடலூர்:வடலூரில் வள்ளலாரின் 196வது ஆண்டு வருவிக்க உற்ற நாள் (பிறந்த நாள்) விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.வள்ளலார் 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி மருதூரில் பிறந்தார். அவரது 196வது வருவிக்க உற்ற நாளையொட்டி, (பிறந்த நாள்) வள்ளலார் நிறுவிய வடலூர் சத்திய ஞான சபை, தருமசாலை, மருதூர் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.நிகழ்ச்சியையொட்டி, கடந்த 27, 28, 29, ஆகிய தேதிகளில் தருமசாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணமும், 30ஆம் தேதி முதல் 1, 2, 3 ஆகிய தேதி வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதலும்; இன்று 5ம் தேதி காலை 5:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவற் பாராயணம், காலை 7:30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்க கொடி உயர்த்துதல், வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் உள்ள ஞானசபை வழிபாட்டு மேடையை சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடக்கிறது.விழாவை முன்னிட்டு சன்மார்க்க சொழ்பொழிவு, அன்னதானம் நடைபெறும்.