வேலுார்: திருமலை, திருப்பதி மையத்தில், 500 கிலோ லட்டுக்கு சிறப்பு பூஜை நடந்தது. புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, வேலுார் அண்ணா சாலையில் உள்ள, திருமலை– திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், பெருமாள் பக்தர்கள் சார்பில், 500 கிலோ லட்டு தயாரிக்கப்பட்டு, பெருமாளுக்கு படைக்கப்பட்டது. வெள்ளிக்கவச அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில், மையத்தில், 10 ஆயிரம் பேருக்கு, வேலுார் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு அன்னதானம் வழங்கினர்.