Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாபுஷ்கர விழாவிற்கு தயாராகவில்லை ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.10ல் நவராத்திரி விழா துவக்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனி: சுசீந்திரத்தில் இருந்து தேவி புறப்பாடு
எழுத்தின் அளவு:
நவராத்திரி பவனி: சுசீந்திரத்தில் இருந்து தேவி புறப்பாடு

பதிவு செய்த நாள்

07 அக்
2018
12:10

நாகர்கோவில்:மன்னர் கால வழக்கத்தை நினைவு கூரும் நவராத்திரி பவனி இன்று பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை சிலை பல்லக்கில் நேற்று காலை புறப்பட்டது. திருவிதாங்கூர்  சமஸ்தானத்தில் தலைநகராக பத்மனாபபுரம் விளங்கி வந்த நிலையில்,1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் ,நிர்வாக வசதிக்காக அதை திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். எனினும் நவராத்தி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி  கோயில் சிலை பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.


மன்னர் கால வழக்கம் மாறாமல் அக். 10-ல் தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து இன்று காலைபவனி புறப்படுகிறது. யானை  மீது சரஸ்வதிதேவி, பல்லக்குகளில் முருகன் மற்றும் முன்னுதித்த நங்கை சிலைகள் எடுத்து செல்லப்படுகிறது. இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலை நேற்று காலை புறப்பட்டது. கோயில் முன் தமிழக கேரள போலீசின் அணிவகுப்பு மரியாதைக்கு பின் பவனி  புறப்பட்டது. இதில் நடிகர் சுரேஷ்கோபி எம்.பி., எஸ்.பி. ஸ்ரீநாத், தேவசம்போர்டு இணை ஆணையர் அன்புமணி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுரேஷ்கோபி எம்.பி., சபரிமலை விஷயத்தில் மதநம்பிக்கையை காப்பாற்ற  சாகும்வரை போராட தயாராக இருப்பதாக கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar