பதிவு செய்த நாள்
07
அக்
2018
12:10
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்.,10 முதல் 18 வரை நடக்கிறது.விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பூஜை, சகஸ்ரநாம பூஜை போன்றவை இரவு 8:30 மணி வரை நடக்கும். பூஜை நேரங்களில் மூலஸ்தான அம்மனுக்கு தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் அலங்கார அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்படும்.
அக்.,10 முதல் 19 வரை திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள், அக்.,14ல் சாந்தாபிஷேகம், அன்னாபிஷேகம் நடக்கிறது. அக்.,10 ராஜராஜேஸ்வரி அலங்காரம், அக்.,11 மேருவை சென்டால் அடித்தல், அக்.,12 ஊஞ்சல், அக்.,13 கல்யானைக்கு கரும்பு கொடுத்தல், அக்.,14 வலை வீசி அருளல், அக்.,15 வரகுணபாண்டியருக்கு சிவலோகம் காட்டியது, அக்.,16 ஷண்முகர் ஜனனம், அக்.,17 மகிஷாசுரமர்த்தினி, அக்.,18 சிவபூஜை அலங்காரங்கள் நடக்கிறது.தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஏற்பாடுகளை செய்கின்றனர்.