பதிவு செய்த நாள்
08
அக்
2018
11:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. பெரும் சிரமத்துடன் மழைநீரை வெளியேற்றினர்.
அரபிக்கடலில் உருவாகிய புயல் சின்னத்தால், ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில், மூன்று தினங் களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நேற்று முன்தினம் (அக்., 6)ல் இரவு பெய்த கன மழையால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கிழக்கு வாசலில், மழைநீர் புகுந்து, முகப்பு மண்டபத்தில் தேங்கியது. ஆனால், கோவில் நடை சாத்தி இருந்ததால், பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை. சில ஆண்டுகளாக, கோவில் ரதவீதியில், சாலை புதுப்பிக்கப்பட்டு உயர்ந்ததால், கோவில் நுழைவு வாசல் தாழ்வானது. இதனால், லேசான மழைக்கே, கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. மழை நின்றதும், நீரை கோவில் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.