தேனி:108 திவ்ய தேசங்களில் நடுநாடு தொண்டை நாடு என போற்றப்படும் 24 திவ்ய தேசங் களையும், அப்பகுதியில் உள்ள ஆழ்வார்கள், ஆச்சாரியார் அவதரித்த திருத்தலங்களையும் சேவிக்க ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலயத்தின் மூலம் யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டது. வித்யாலய நிறுவனத் தலைவர் மீனம் மணி பட்டாச்சாரியார் தலைமையில் 80 அடியார்கள் கலந்து கொண்டனர்.