பதிவு செய்த நாள்
08
அக்
2018
02:10
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்துள்ள, கூத்தப்பாடியில் அமைந்துள்ள, திரவுபதி அம்மன் கோவில் திருவிழா, நேற்று (அக்., 7ல்)துவங்கியது. மகாபாரதத்தில் உள்ள, பஞ்ச பாண்டவர் களை மையமாகக் கொண்டு, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, கூத்தப்பாடியில், திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, திரவுபதி, தர்மராஜா, அர்ச்சுணன், பீமன், சகாதேவன், கிருஷ்ணன், அபிமன்யூ உள்ளிட்ட, 17 சுவாமி சிலைகள் உள்ளன.
இந்த கோவில், கூத்தப்பாடி, குள்ளாத்திரம்பட்டி, பொச்சாரம்பட்டி, அளேபுரம், அக்ரஹாரம், மடம், சின்னப்பநல்லூர் உள்ளிட்ட, ஏழு ஊர்களுக்கு பொதுவானது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், மூன்றாவது சனிக்கிழமை இக்கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று துவங்கிய திருவிழாவில், சுவாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து, சுவாமி சிலைகள், குள்ளாத்தரம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று (அக்., 8ல்), தீ மிதி விழா நடக்கிறது. ஒவ்வொரு நாள் என, மீதமுள்ள, ஐந்து ஊர்களுக்கும் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, விழா கொண்டாடப்பட உள்ளது.