Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் ... சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல்: பெருகும் போராட்டங்கள் சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கரம் விழா: தீர்த்தவாரியுடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2018
05:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கவர விழா தீர்த்தவாரியுடன் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

Default Image
Next News

 
குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம்ராசிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெயர்ச்சியடைந்ததை முன்னிட்டு துலாம் ராசிக்கு உரிய நதியான காவிரியில் கடந்த ஆண்டு செ ப்டம்பர் மாதம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனி தநீராடினர். தற்போது குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 12 நாட்கள் தாமிரபரணி புஷ்கரம் வி ழா நடைபெறவுள்ளது. குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்வதால் அந்திம புஷ்கரம் விழா நடத்த காவிரி புஷ்கரம் கமிட்டியினர் திட்டமிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் வடக்குகரை பகுதியில் சிறப்பு ஹோமங்களுடன் அந்திமபுஷ்கரம் விழா தொடங்கியது.

வரும் 11ம் தேதி வரை அந்திம புஷ்கம் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று தொடங்கிய சிறப்பு ஹோமங்கத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் சங்கல்பம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மதியம் 12 மணியளவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வதானேஸ்வரர் சுவாமி கோயிலில் இருந்து அஸ்திரதேவர் காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருள தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்ப லவாண தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி தீர்த்தம் கொடுக்க திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். இதில் புஷ்கர கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், புஷ்கரகமிட்டி பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், ஜெகவீரபாண்டியன், தியாகராஜன், அப்பர்சுந்தரம் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அந்திம புஷ்கரத்தையொட்டி தினமும் மாலை காவிரித்தாய்க்கு ஆரத்தி வழிபாடுகள் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar