Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ... மேல்மலையனுார் அமாவாசை ஊஞ்சல்: மழையிலும் குவிந்த பக்தர்கள் மேல்மலையனுார் அமாவாசை ஊஞ்சல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல்: பெருகும் போராட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2018
10:10

திருவனந்தபுரம் : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் பிரச்னையில் கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால், சன்னிதானத்தில் பெண் போலீசாரை நியமிக்கும் முடிவு கைவிடப்பட்டது. தொடர் போராட்டங்களால், முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சபரிமலையில், பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, 10 - 50 வயது வரையுள்ள பெண்கள், கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. அய்யப்பன், பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இந்த நடைமுறை, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது.

Default Image

Next News

இந்நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து, ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு, சீராய்வு மனு தாக்கல் செய்யாதது, கேரளாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மாநில அரசைக் கண்டித்து, பெண்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைப் பார்த்து, சில கட்சிகளும் நிலைப்பாட்டை மாற்றியுள்ளன. இந்த பிரச்னையில் சுமுக நிலையை ஏற்படுத்தும் வகையில், ஐயப்பன் பிறந்ததாக நம்பப்படும், பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் தாழமன் தந்திரி குடும்பத்தினரை, பேச்சு நடத்த, மாநில அரசு அழைத்தது. சீராய்வு மனு தாக்கல் செய்யாத நிலையில் பேச்சு நடத்தி பயன் இல்லை என, அவர்கள் அழைப்பை நிராகரித்ததால், போராட்டம் மேலும் வலுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்திய பெண்கள், தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தனர். ஐப்பசி மாத பூஜைக்கு பெண்கள் வந்தால், அவர்களை தடுக்க, பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பந்தளத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள், அக்., 11ல்,- ஊர்வலமாக புறப்பட உள்ளனர். இப்பிரச்னை குறித்து விவாதிக்க, காங்., தலைமையிலான கட்சிகளின் கூட்டம் நேற்று நடந்தது. இதன் பின், எதிர்க்கட்சித் தலைவரும், காங்., மூத்த தலைவருமான, ரமேஷ் சென்னிதலா கூறுகையில், இப்பிரச்னையில் மத நம்பிக்கை உள்ளவர்களின் பக்கம் நிற்போம். பா.ஜ., சந்தர்ப்பவாதமாக செயல்படுகிறது, என்றார். இந்நிலையில், அக்., 11-ல், பந்தளத்தில் துவங்கி, அக்., 15-ல், திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நிறைவு அடையும் வகையில், நீண்ட யாத்திரை நடத்தப் போவதாக, பா.ஜ., மாநில தலைவர், ஸ்ரீதரன் பிள்ளை அறிவித்தார்.

பின்வாங்கிய அரசு : சபரிமலையில், பெண்களின் பாதுகாப்புக்காக பெண் போலீசாரை அனுப்ப, மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக, 40 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அந்த முடிவில் இருந்து, அரசு பின்வாங்கி உள்ளது. ஐப்பசி மாத நடை திறப்பின் போது, பெண் போலீசாரை அனுப்ப வேண்டாம்; தேவைப்பட்டால் பம்பை வரை அனுப்பலாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் முரண்டு : எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: சமீபத்திய மழை பாதிப்பின் போது ஏற்பட்ட சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. சபரிமலை பிரச்னையில் கலவரம் ஏற்படுத்த, சிலர் முயற்சிக்கின்றனர்; இது, மாநில நலனுக்கு நல்லதல்ல. தீர்ப்பை அரசு செயல்படுத்தும் என, நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளோம். அதனால், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது. மத நம்பிக்கை உள்ளோருடன் மோதும் எண்ணம், அரசுக்கு இல்லை. அரசியல் ரீதியாக கலகம் ஏற்படுத்துவோரிடம், அரசு அடிபணியாது. இவ்வாறு அவர் கூறினார். சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், முதல்வர் பினராயி விஜயனும், அவரது கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீராய்வு மனு தாக்கல்:
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, நாயர் சர்வீஸ் சொசைட்டி மற்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலையில் முழுமையாகவே பெண்களை அனுமதிக்காமல் இருந்தால் தான், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக கருதப்படும். ஆனால், சபரிமலையில், பெண்களையும் அனுமதிக்கிறோம். அதே நேரத்தில், ஐயப்பன், பிரம்மச்சாரி கடவுள் என்பதால், பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற மதம் அடிப்படையிலான சம்பிரதாயத்தில் தலையிட யாருக்கும், நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூட, பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவே கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், பாலியல் பாகுபாடு எதுவும் சபரிமலையில் இல்லை. அதனால், தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar