Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் ... தாமிரபரணி புஷ்கரம் ரத யாத்திரை: ராமேஸ்வரத்தில் துவக்கம் தாமிரபரணி புஷ்கரம் ரத யாத்திரை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அமாவாசை ஊஞ்சல்: மழையிலும் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அமாவாசை ஊஞ்சல்: மழையிலும் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 அக்
2018
11:10

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் மழை தொடர்ந்து அச்சுறுத்திய நிலையிலும் வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை செய்தனர்.  அன்று இரவு 11.30 மணிக்கு வாத்தியங்கள் முழுங்க சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த ஊஞ்சல் தாலாட்டில், கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமிவந்து ஆடினர்.
 
இதில் திண்டிவனம் மாவட்ட உரிமையியல் கூடுதல் நீதிபதி அருணாச்சலம், இந்து சமய உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் பிரகாஷ், திருவண்ணாமலை மோகனசுந்தரம் மற்றும் அறங்காவலர்கள் காவலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, புதுச்சேரி, கடலுார், வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். நேற்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் இருந்தது. அத்துடன், பல இடங்களிலும் விட்டு விட்டு பரவலாக மழை பொழிந்தது. இரவு 8 மணியளவில் மேல்மலையனுாரிலும் லேசான மழை இருந்தது. இருந்தும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் வழக்கம் போல் லட்சக்கணக்கில் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar