பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
அன்னுார் சொக்கம்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில், 51வது ஆண்டு நவராத்திரி விழா கொலு பூஜையுடன் துவங்கியது. தேவனாபுரம் ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் கோவில் குழு பஜனை நடந்தது. இன்று தாச பளஞ்சிக மாதர் சங்கம் சார்பில், பெற்றோர் கனவை பெரிதும் நனவாக்குவது மகனே, மகளே எனும் தலைப்பில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமதாஸ் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. நாளை மாலையில் திருவிளக்கு வழிபாடு, இரவு இசை, நடன, நாடக நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுதினம், 14, 15ம் தேதிகளில் இரவு உள்ளூர் பஜனை, 16ல் பட்டிமன்றம் நடக்கிறது.
சோமனுார்: காடம்பாடி கிராமத்துக்கு உட்பட்ட குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நவராத்திரி கொலு பூஜை துவங்கியது. நேற்று மகேஸ்வரி பூஜை நடந்தது; இன்று வாராஹி கன்யா பூஜை நடக்கிறது. இறுதி நாளில், மஹா சாமுண்டி பூஜை மற்றும் நவராத்திரி கொலுவுடன் பூஜை நிறைவுபெறும்.சூலுார் வட்டாரத்தில், நவராத்திரி விழா கோவில்களில் நேற்று முன்தினமும், வீடுகளில் நேற்றும் துவங்கின. கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. வீடுகளில் படி அமைத்து, கொலு பொம்மை வைத்து, பெண்கள் வழிபாடுகள் செய்தனர். அம்மன் பாடல்களை பாடி, சிறுவர், சிறுமியருக்கு பிரசாதம் வழங்கினர். அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது.