பதிவு செய்த நாள்
12
அக்
2018
11:10
போடி: போடி தாய்ஸ்தலம் சவுடாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஜாதி பொதுமை தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் கொலு வைக்கப்பட்டு பெண்கள் மூலம் பஜனை நடத்தப்பட்டன.
* குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், மேலத்தெரு சவுடம்மன் கோயில், திருமலாபுரம் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
*கூடலுார் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் சகிலா சுலைமான், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாணவர்கள் , ஆசிரியர்கள் சேகரித்த கொலு பொம்மைகள் , பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். *சுந்தரவேலவர் கோயிலில் கொலு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 9 நாட்கள் இக்கண்காட்சிக்கு முன் சிறப்பு பூஜை நடக்கிறது. பெண்கள் பக்தி பாடல்களை பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.