Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாயமான கோவில் சிலைகள் ... செங்கல்பட்டில் தசரா விழா துவக்கம் செங்கல்பட்டில் தசரா விழா துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி விழா: அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி விழா: அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2018
12:10

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. விநாயகர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, 20ம் தேதி வரை நடக்கிறது. தினமும், ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி, தினமும் மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை வாசவி மகாலில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பக்தி இன்னிசை, ஜெயக்குமார் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, நவரச நாட்டியாலயா பரதநாட்டிய நிகழ்ச்சி, 70 கலைஞர்கள் பங்கேற்கும் வீணை கச்சேரி, சொல்லுங்கள், வெல்லுங்கள்; இன்னிசை நிகழ்ச்சி, பிரம்ம குமாரிகள் சொற்பொழிவு, நடனம், பாட்டு, மாறுவேடம், ஓவியப்போட்டிகள் நடக்கின்றன.

கிணத்துக்கடவு: சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம், நவராத்திரியை முன்னிட்டு கொலு பூஜை துவங்கியது.கோவிலின் முன்பகுதியில், அமைக்கப்பட்ட சிறப்பு மாடத்தில், தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். முதல் நாளில் துர்கா பரமேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னபூரணி, ராஜராஜேஸ்வரி, ஆண்டாள், மகாலட்சுமி, சிவபூஜை, மீனாட்சி, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். நிறைவு நாளில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரங்களில் அம்மன் கொலு வைக்கப்படுகிறது. கொலுவில், அம்மன் அவதாரங்கள், திருமண வைபவம், விவசாயம், விநாயகர் ஞானப்பழம் பெறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இரவு, 7.30 மணிக்கு, கொலு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar