நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2018 01:10
கிருஷ்ணகிரி: நவராத்திரி விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். நவராத்திரி விழா கடந்த 9ல் துவங்கியது. அன்று முதல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதே போல் வீடுகளில் கொலு பொம்மை வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் பொம்மைகளை அடுக்கி வைத்து தினமும், சுண்டல், பொங்கல் வைத்து பூஜைகள் செய்து வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு பிரசாதம் வழங்கி வருகின்றனர். அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், கொலு பொம்மைகள் வைத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.