Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலாப்பூர் கோவிலில் சிலை திருட்டு ... விவசாய பொருளாதாரத்திற்கு வித்திடும் நவராத்திரி விவசாய பொருளாதாரத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி மகா புஷ்கர விழா: புனித நீராட குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தாமிரபரணி மகா புஷ்கர விழா: புனித நீராட குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 அக்
2018
11:10

திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், ஆற்றங்கரையில் புனித நீராட, அதிகாலை முதலே, மக்கள் கூட்டம் அலைமோதியது.தாமிரபரணி மகா புஷ்கர விழா, நேற்று முன்தினம் துவங்கியது. பாபநாசத்தில் துவங்கிய விழாவில், கவர்னர் புரோஹித் புனித நீராடினார்.நேற்று, 12ம் தேதி முதல், 23ம் தேதி வரை, 12 ராசிக்காரர்களும் தாமிரபரணியில் நீராடினால், புனிதம் கிட்டும் என்பதால், தாமிரபரணியில், நேற்று அதிகாலை முதலே, குடும்பம், குடும்பமாக மக்கள் புனித நீராடினர்.நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஏராளமான படித்துறைகளில், பெண்கள், மஞ்சள் பொடியை தண்ணீரில் கரைத்து, புனித நீராடினர்.

பொதுமக்கள் வீடுகளுக்கு, பாட்டில்களில் புனித நீர் எடுத்துச் சென்றனர்.வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை, 5:00 மணி முதலே, பொதுமக்கள் ஆற்றங்கரையில் குவிந்தனர். காலை, 9:00 மணி வரை கூட்டம் அலைமோதியது. பின், வெயில் வர துவங்கியதால், படிப்படியாக கூட்டம் குறைந்தது. இன்று சனி, நாளை ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், மேலும் கூட்டம் அதிகரிக்கும் என தெரிகிறது.கூடுதல் சிறப்பு ரயில்கள் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு, வட மாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதற்காக, தெற்கு ரயில்வே ஐந்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இவை அனைத்திலும், கூட்டம் அலை மோதுகிறது.தவிர, நெல்லை, பொதிகை, சிலம்பு, அனந்தபுரி, கன்னியாகுமரி, செந்துார் எக்ஸ்பிரஸ் என, சென்னை - நெல்லை மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், வழக்கத்திற்கு மாறாக, கூட்டம் நிரம்பி வழிகிறது.இவை அனைத்திலும், புஷ்கர விழா முடியும், 23ம் தேதி வரை, முன்பதிவு முடிந்து, 200க்கு மேல் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. எனவே, பக்தர்களின் வசதிக்காக, கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.குமரியிலும் கோலாகலம்கன்னியாகுமரி மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க, திக்குறிச்சி மகாதேவர் கோவில் அருகிலுள்ள, தாமிரபரணி தீர்த்தப்படித் துறையிலும், புஷ்கர விழா துவங்கி, நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar