விழுப்புரத்தில் திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2018 12:10
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் ஸ்ரீ சரத் நவராத்திரி விழா, 9ம் தேதி கடஸ்தாபனத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று (அக்., 12ல்) காலை 5:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் சக்ர நவாவரண பூஜை சுவாசினி பூஜை மேருவிற்கு லட்சார்ச்சனை ஞானாம்பிகை ஞானமகாலட்சுமி ஞானதுர்கா தேவிகளுக்கு த்ரிசதி சகஸ்சர நாமார்ச்சனை சகல உபசாரங்களுடன் நடந்தது.தொடர்ந்து வரும் 18ம் தேதி வரை தினசரி காலை மாலை பூஜைகள் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நவசண்டி ஹாமம் நடக்கிறது. விஜயதசமி தினமான 19ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு துவங்கி பகல் 11:30 மணி வரை‚ சுவாகினி தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை‚ லட்சார்ச்சனை அதிஷ்டானத்தில் கடஅபிஷகம் மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.