பதிவு செய்த நாள்
15
அக்
2018
01:10
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த, ஐகுந்தம் கொத்தப்பள்ளியில், சீனிவாச பெருமாள் சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில், தட்டு
வரிசைகளுடன், பக்தர்கள் பங்கேற்றனர். பின், சீனிவாச பெருமாளுக்கு, சிறப்பு யாகம் நடத்தி, பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், பெருமாள் அருள் பாலித்தார்.