பதிவு செய்த நாள்
15
அக்
2018
01:10
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 34 நாட்களில், பக்தர்கள் உண்டியலில், 70.05 லட்சம் ரூபாய் ரொக்கம், 495 கிராம் தங்கம் செலுத்தியுள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு,
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். பக்தர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை, நேற்றுமுன்தினம் (அக்.,13ல் காலை, கோவில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 34 நாட்களில் சேர்ந்த, 70லட்சம் ரூபாய், 495 கிராம் தங்கம், 5,545 கிராம் வெள்ளி,பக்தர்கள் உண்டியலில் இருந்தன.