பதிவு செய்த நாள்
16
அக்
2018
01:10
ஆத்தூர்: ஆத்தூரில், சத்குரு ஷீரடி சாய்பாபா கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ஆத்தூர், அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில், சத்குரு ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு, கடந்த ஆக., 29ல், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாபாவுக்கு தினமும் அலங்கார, ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்துக்குப்பின், நேற்று (அக்., 15ல்), 48வது நாள் மண்டல அபிஷேக பூஜை நடந்தது. சாய்பாபாவுக்கு வேள்வி பூஜை செய்து, மலர் அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.