திருக்கோவிலூர்:சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வலியுறுத்தி மணலூர்பேட்டையில் இந்து அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சபரிமலைக்கு பெண் பக்தர்கள் செல்வது குறித்த சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி‚ மணலூர்பேட்டை பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து அமைப்பின் நகர தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.பா.ஜ.‚ மாவட்ட துணை தலைவர் உமாமகேஸ்வரி வரவேற்றார். விழுப்புரம் லோக்சபா தொகுதி இணை பொறுப்பாளர் கலிவரதன் கண்டன உரையாற்றினார். ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த சேகர்‚ பாலாஜி‚ ஜெகதீசன்‚ குமார்‚ ரகுபதி‚ பாவாடை‚ கணேசன்‚ அருள்‚ சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பா.ஜ.‚ ஒன்றிய தலைவர் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.