Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரையூர் சபரிமலை பிரச்னையில் ஐயப்ப ... சூரிய , சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி வலம் சூரிய , சந்திர பிரபை வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
96 சதவீத சிலைகளை அறநிலையத்துறை பதியவில்லை ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2018
12:10

சோழவந்தான்: அறநிலையத்துறை கோயில்களில் 96 சதவீத ஐம்பொன் சிலைகளை பதிவு செய்யவில்லை, என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கூறினார். மதுரை மாவட்டம் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயின. அங்கு நேற்று (அக்., 16ல்) அவர் ஆய்வு செய்தார்.

பின், அவர் கூறியதாவது:கொள்ளை போன நான்கு ஐம்பொன் சிலைகளை 1992ல் அறநிலைய த்துறை பதிவு செய்துள்ளது. எனவே, இவை நூற்றாண்டு பழமையானவை. மற்ற கோயில் களில் உள்ள 96 சதவீத ஐம்பொன் சிலைகளை அறநிலையத்துறையினர் பதிவு செய்ய வில்லை. 2,700 கோடி ரூபாயில் முக்கிய இடங்களில் திருமேனிகள் பாதுகாப்பு மையம் அமைக்கும்படி அறநிலையத்துறையிடம் ஓராண்டாக கூறி வருகிறோம்.2017க்கு பின் நடந்த சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மாட்டோம். எனவே குருவித்துறை சிலை திருட்டு வழக்கை சோழவந்தான் போலீசார் நடத்துவர், என்றார்.

ஐம்பொன் சிலைகள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த கணேசனுக்கு பொன்.மாணிக் கவேல் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படவுள்ளது.250 ரூபாய் பூட்டு போதாது!

குருவித்துறை கோயில் பாதுகாப்பு குறித்து செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் பொன் மாணிக்கவேல் கூறியதாவது:ஐம்பொன் சிலைகள் உள்ள அர்த்த மண்டபம் முன் பிரைட் பார் எனும் 32 இன்ச் அளவுள்ள இரும்பு ராடுகளை கொண்டு பாதுகாக்க வேண்டும். கதவுகளில் நான்கு இடத்தில் டிஸ்க் கிளாக்குகளால் பூட்ட வேண்டும். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை பாதுகாக்க 250 ரூபாய் பூட்டு போதாது.தங்க நகைகளை பாதுகாக்க தரமான இரும்பு பெட்டிகள் தேவை. அவை கோயிலுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அதிகாரி அறையில் வைக்கக்கூடாது. கோபுரத்தின் உச்சியில் அபாய ஒலி அமைப்பு கருவியை வைத்து, ஊருக்கே கேட்கும்படி செய்ய வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar