புதுடில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், கோர்ட் தீர்ப்பால், சபரிமலையில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நம்பிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. சட்ட திட்டம் என்ற பெயரில். உண்மையான பக்தர்களின் உணர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் 6வது சீராய்வு மனு இதுவாகும்.