பதிவு செய்த நாள்
18
அக்
2018
03:10
கரூர்: கரூரில் நடந்த, எறிபத்த நாயனார், யானை துண்டித்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும், பூக்குடலை விழா, எறிபத்த நாயனார் யானையை துண்டித்த விழா, மிகவும் பிரசித்தி பெற்றது. மகா அஷ்டமி நாளான நேற்று காலை, 8:30 மணிக்கு, நகராட்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், சிவனாடியார்கள், எறிபத்த நாயனார் யானையை துண்டித்த நிகழ்வை, தத்ரூபமாக செய்து காட்டினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, கோவிலில் அனைத்து சன்னதிகளிலும், சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.