Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயதசமி விழா கோலாகலம்: ... துலாம் மாதம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக்குடத்தில் திருமஞ்சனம் துலாம் மாதம்: ஸ்ரீரங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் துலா மாத பிறப்பு தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2018
11:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலாமாத பிறப்பு தீர்த்தவாரியையொட்டி காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

Default Image
Next News

கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி னால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கி வருகிறது. இத்தகைய பெருமைமிக்க துலா உற்சவம் மயிலாடு துறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் நேற்று ஐப்பசி (துலா மாதம் )மாதம் பிறப்பை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூர நாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி ஆகிய சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காவிரி துலாக்கட்டத்தின் இரு கரைகளிலும் எழுந்தருளின. காவிரிக் கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாணதம்பிரான் சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தீர்த்தம்கொடுக்க காவிரியில் புனிதநீராடின ர். இதில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் நவம்பர் 7ம்தேதி அமாவாசை தீர்த்தவாரியும், திருக்கொடியேற்றமும், 13ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி திருத்தேரோட்டமும், நவ ம்பர் 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar