Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சாய்பாபா கோவிலில் மகாசமாதி ... சபரிமலை கோயிலை பூட்ட முடிவு: தந்திரி சபரிமலை கோயிலை பூட்ட முடிவு: தந்திரி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மேல்சாந்திகள் தேர்வு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மேல்சாந்திகள் தேர்வு

பதிவு செய்த நாள்

19 அக்
2018
12:10

சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக பெங்களூருவை சேர்ந்த வி.என்.வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவர்.

கேரள உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள், தந்திரிகள் கொண்ட குழுவினர் நேர்முகத் தேர்வு நடத்தி பட்டியல் தயாரிப்பர். ஐப்பசி 1ல் இந்த பட்டியலில் இருந்து ஒருவர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அவர் ஒரு ஆண்டு வரை சபரிமலையில் தங்கி பூஜை செய்ய வேண்டும்.வரும் கார்த்திகை 1ல் பதவியேற்கும் மேல்சாந்தி தேர்வு நேற்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் முன்னிலையில் சபரிமலையில் நடந்தது. துண்டுச் சீட்டுகள் கொண்ட பாத்திரங்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்தினார். பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் சவுரவ் வர்மா துண்டுச்சீட்டுகளை எடுத்தார்.முதலில் எடுக்கப்பட்ட ஐந்து பெயருக்கு நேராக வெற்றுச்சீட்டு வந்தது. ஆறாவது சீட்டாக வடக்கு பெங்களூரு எஸ்.எம்.ரோட்டை சேர்ந்த வி.என்.வாசுதேவன் நம்பூதிரி பெயருக்கு நேராக மேல்சாந்தி என்ற சீட்டு வந்தது.அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாளிகைப்புறம் கோயிலுக்கு ஆலப்புழா மாவட்டம் செங்கன்னுார் திருவன்வூரை சேர்ந்த எம்.என்.நாராயணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். சபரிமலை, மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமனத்துக்காக தலா ஒன்பது பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. இரண்டு தேர்விலும் ஆறாவது பெயருக்கு நேராக மேல்சாந்தி என வந்ததால் ஆறாம் எண் ராசியானது.நேற்று (ஐப்பசி 1) அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 7:00 மணிக்கு பின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar