Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் நவராத்திரி ... திருவள்ளூர் கன்யகா பரமேஸ்வரிக்கு நாணய அலங்காரம் திருவள்ளூர் கன்யகா பரமேஸ்வரிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிருபருக்கு கோயிலில் சிலை வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
நிருபருக்கு கோயிலில் சிலை வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

19 அக்
2018
01:10

ஆத்துார் : ஆங்கிலேயர் காலத்தில்,கையெழுத்து இயக்கம் நடத்தி, ஆத்துாருக்கு ரயில் பாதை பெற்று தந்த, நிருபருக்கு, விநாயகர் கோயிலின் கோபுரத்தில் சிலை வைத்து, பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

சேலம் மாவட்டம்,ஆத்துாரை சேர்ந்தவர், சீதாராமன் அய்யர். 1905ல் பிறந்த இவர், எஸ்.எஸ்.எல்.சி., படித்து, கோவையில், ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தார்.ஆத்துார், கடைவீதியில், லண்டன் மிஷன் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்தார்.அப்போது, ஜி.சுப்ரமணிய அய்யர் நடத்தி வந்த, சுதேசமித்ரன் என்ற பத்திரிகையில், பகுதி நேர நிருபராக பணிபுரிந்தார். ஆசிரியர் பணி முடிந்ததும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்ளூர் பிரச்னைகளை, பத்திரிகைக்கு செய்தியாகஅனுப்புவதுடன், சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த, 1930ல், ஆத்துார் வழியாக, சேலம் - விருத்தாச்சலம் ரயில் பாதை திட்டம் அமைக்கக் கோரி, கையெழுத்து இயக்கம் நடத்தி, 600 பேரிடம் கையெழுத்து பெற்று, ஆங்கிலேய அரசிடம்வழங்கினார்.

அதன் பின், 1932ல், ரயில் பாதைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பாதை அமைக்கப்பட்டது. வாழ் நாள் முழுவதும் சேவையாற்றி வந்த இவர், 1983ல், 78வது வயதில் உயிரிழந்தார்.அவரை போற்றும் வகையில், ஆத்துார், வரசித்தி விநாயகர் கோவில் கோபுரத்தில், சீதாராமன் அய்யருக்கு, உருவச்சிலை வைத்து, அப்பகுதியினர் வழிபாடு செய்துவருகின்றனர்.

ஆத்துாரை சேர்ந்த, குமார் கூறியதாவது: பள்ளி ஆசிரியர், கால்பந்து வீரர், பத்திரிகையாளர் என, பன்முக திறமை கொண்ட இவர், சுதேசமித்ரன் பத்திரிகையில், உதவி ஆசிரியராக, பாரதியார் பணிபுரிந்த போது, இவரும் நிருபராக பணியில் சேர்ந்து, 20ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.ஆத்துார் ரயில் பாதைக்கு காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி, சமூகசேவை பணிகள் செய்ததால், விநாயகர் கோவில் கோபுரத்தின் தெற்குதிசையில், இவரது உருவச்சிலை வைத்து, இன்றளவும் வழிபாடு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar