பதிவு செய்த நாள்
20
அக்
2018
11:10
கூடலூர்: நீலகிரியில் உள்ள பல்வேறு கோவில்களில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் விநாயகர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், பல குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு அரிசியில் அ,ஆ., எழுத வைத்து, நாக்கில் அச்சாரம் எழுதப்பட்டது.
இதேபோல, கூடலூர் முனீஸ்வரன் கோவில், மேல்கூடலூர் மாரியம்மன் கோவில், மண்வயல் மாதேஸ்வரன் கோவில், புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவில், கல்லிங்கரை சிவன் கோவில், தேவர்சோலை சங்கரன் கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.இதேபோல, ஊட்டியில், தெய்வீக நற்பணி அறக்கட்டளை; பூவையர் சங்கம் சார்பில், சீனிவாச பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில், காலை, 9:30 மணி முதல் 12:00 வரை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. மேலும், ஐயப்பன் கோவில், காந்தள் காசிவிஸ்வநாதர் கோவில் உட்பட சுற்றுப்புற கோவில்களில், இந்த நிகழ்ச்சி நடந்தது.