Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை அடைப்பு சென்னை மயிலாப்பூர்ஷீரடி சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 அக்
2018
12:10

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் 1033வது ஆண்டு சதயவிழா வெகு சிறப்பாக நடந்தது.

தஞ்சை பெரியகோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளில் தான் தஞ்சை பெரிய கோவில் (கி.பி 985ல்) முதன் முதலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு 1033-வது சதயவிழா (19ம் தேதி) காலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், விழா மங்கள இசை முழங்க தொடங்கியது. பிறகு திருமுறை அரங்கம், மாமன்னன் ராஜராஜன் கண்ட திருமுறை, ராஜராஜன் ஆட்சிக்காலம், போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும், திருமுறை பன்னிசை, திருமுறை இசையரங்கம் போன்றவை நடைபெற்றன.

2ம் நாளான  (20ம்தேதி) காலை 7.30 மணிக்கு ராஜராஜசோழன் சிலைக்கு கலெக்டர் அண்ணாதுரை,போலீஸ் எஸ்.பி., செந்தில்குமார்,சதயவிழா குழு தலைவர் திருஞானம் ஆகியோர் மாலை அணிவித்தனர். முன்னதாக தஞ்சை பெருவுடையார் கோயிலில் பணிபுரியும்  சிவாச்சாரியர்கள், ஒதுவார்கள், பணியாளர்களுக்கு முறைப்படி வேட்டி, வஸ்திரம், வெற்றிலை பாக்குடன் வழங்கப்பட்டது. திருமுறை வீதி உலாவை திருவாடுதுறை ஆதினம் தம்பிரான் சாமிகள் தொடங்கி வைத்தார். அதையடுத்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் நவகவ்யப் பொடி, திரவியப் பொடி, வாசனைப் பொடி, மஞ்சள் பொடி, பால், அரிசி மாவு பொடி, சந்தன பொடி, பச்சிலை பொடி ஆகியவை தலா 50 கிலோ கொண்ட பொடிகளாலும், ஒரு டின் தேன், ஒரு டின் நெய், ஒரு டின் பஞ்சாமிர்தம், 400 லிட்டர் பசும்பால், 40 டின் தயிர், 100 கிலோ பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் பேரபிஷேகம், 108 கலச அபிஷேகம் நடந்தது. அபிஷே கத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து மாலையில், நாதஇசை சங்கமம், திருமுறை பண்ணிசையரங்கம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் நடக்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனின் பெரும் புகழுக்கு காரணம் அரசியல் மாட்சியே, அருங்கலை வளர்ச்சியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar