கரூரில் சாய்பாபா நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2018 02:10
கரூர்: சாய்பாபா மகா சமாதி நூற்றாண்டு விழா மற்றும் ருத்ராபிஷேக விழா துவங்கியது. கரூர், மேட்டுத்தெருவில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில், சாய்பாபா நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மதியம்,1:00 மணிவரை, ருத்ர ஜபம், ருத்ராபிஷேகம் நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமம், நடந்தது. மதியம் அன்னதானம், மாலை சாய் பஜனை, சுவாமி வீதி உலா நடந்தது. வரும், 21 முதல், பாராயணம், ஆரத்தி அன்னதானம் நடக்க உள்ளது.