Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமநாதபுரம், உத்தரகோசமங்கை, ... பரமக்குடியில் வன்னிகாசூரன் வதம் பரமக்குடியில் வன்னிகாசூரன் வதம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பிரமாண்ட தேர்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பிரமாண்ட தேர்

பதிவு செய்த நாள்

20 அக்
2018
02:10

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் போது "திருத்தேர் மண்டகப்படியை திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். கோயிலுக்கென்று தனித்தேர் இல்லாததால், தேர்வடிவில் மின்விளக்கு அலங்காரமே ரத வீதிகளில் வலம் வருவது வழக்கம்.

இதனால் அச்சங்கத்தினர் கோயிலுக்கு ரூ. 23 லட்சத்தில் புதிய தேரை வழங்க திட்டமிட்டு, கடந்த ஆண்டு கோயில் வளாகத்தில் அதற்கான பணியை துவக்கினர். ஓராண்டாக இப்பணி நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஸ்தபதி மதிவாணன் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தேர் வெள்ளோட்டம் காண தயாராகிவிட்டது.

மதிவாணன் கூறியதாவது: தேர் இலுப்பை மரத்தால் அமைக்கப்படுகிறது. தற்போது பனிரெண் டே முக்கால் அடி உயரம் வந்துள்ளது. பூதபார் முதல் தேவஸ்தானம் வரை செய்துள் ளோம். வெள்ளோட்டம் முடிந்ததும், மேல் பகுதியில் அலங்கார கால்கள் பொருத்தப்பட்டு முழுமை பெறும். ஒரு மாதத்தில் பணிகள் முடியும், என்றார்.

முபத்தைந்து டன் எடை: புதிய தேர் உயரம் 31.5 அடி, 35 டன் எடை கொண்டது சக்கரம் மற்றும் அச்சு இரும்பால் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரத்துக்கு மேல் பூதபார், முதல் அடுக்கில் கோட்டை மாரியம்மன் கோயில் சிற்பங்கள், 2வது அடுக்கில் அம்மன், ஈசன், மகா விஷ்ணு
சிற்பங்கள், 3ல் ஸ்தல புராண சிற்பங்கள், அதற்குமேல் சிம்மாசனமும், தேவஸ்தானமும் அமைந்துள்ளன. இதன் மேல் அலங்காரகால் பொருத்தப்படும். கோயில் ஆகம விதிப்படி தேர் உருவாகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar