பதிவு செய்த நாள்
20
அக்
2018
02:10
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் போது "திருத்தேர் மண்டகப்படியை திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். கோயிலுக்கென்று தனித்தேர் இல்லாததால், தேர்வடிவில் மின்விளக்கு அலங்காரமே ரத வீதிகளில் வலம் வருவது வழக்கம்.
இதனால் அச்சங்கத்தினர் கோயிலுக்கு ரூ. 23 லட்சத்தில் புதிய தேரை வழங்க திட்டமிட்டு, கடந்த ஆண்டு கோயில் வளாகத்தில் அதற்கான பணியை துவக்கினர். ஓராண்டாக இப்பணி நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஸ்தபதி மதிவாணன் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தேர் வெள்ளோட்டம் காண தயாராகிவிட்டது.
மதிவாணன் கூறியதாவது: தேர் இலுப்பை மரத்தால் அமைக்கப்படுகிறது. தற்போது பனிரெண் டே முக்கால் அடி உயரம் வந்துள்ளது. பூதபார் முதல் தேவஸ்தானம் வரை செய்துள் ளோம். வெள்ளோட்டம் முடிந்ததும், மேல் பகுதியில் அலங்கார கால்கள் பொருத்தப்பட்டு முழுமை பெறும். ஒரு மாதத்தில் பணிகள் முடியும், என்றார்.
முபத்தைந்து டன் எடை: புதிய தேர் உயரம் 31.5 அடி, 35 டன் எடை கொண்டது சக்கரம் மற்றும் அச்சு இரும்பால் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரத்துக்கு மேல் பூதபார், முதல் அடுக்கில் கோட்டை மாரியம்மன் கோயில் சிற்பங்கள், 2வது அடுக்கில் அம்மன், ஈசன், மகா விஷ்ணு
சிற்பங்கள், 3ல் ஸ்தல புராண சிற்பங்கள், அதற்குமேல் சிம்மாசனமும், தேவஸ்தானமும் அமைந்துள்ளன. இதன் மேல் அலங்காரகால் பொருத்தப்படும். கோயில் ஆகம விதிப்படி தேர் உருவாகிறது.