Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரையில் நவராத்திரி உற்ஸவத்தில் ... தாமிரபரணியில் மகாபுஷ்கரம்: ஒரேநாளில் 3 லட்சம் பேர் நீராடினர் தாமிரபரணியில் மகாபுஷ்கரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணவர்கள் கண்டுபிடித்த பழங்கால நடுகற்கள்
எழுத்தின் அளவு:
மாணவர்கள் கண்டுபிடித்த பழங்கால நடுகற்கள்

பதிவு செய்த நாள்

20 அக்
2018
04:10

பட்டிவீரன்பட்டி: சங்க இலக்கியம், பண்டைய காலங்களில் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் எனப்படும் நடுகற்களை, சித்தரேவு பகுதி நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பழங்காலத்தில் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்லை, வீரக்கற்கள் என்பர். உலகின் பல பகுதிகளிலும் இவ்வழக்கம் இருந்துள்ளது. நமது நாட்டிலும் தமிழகத்தில் நடுகல் எடுக்கும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னிவாடி ஜமீனுக்கு உட்பட்ட சித்தரேவு, அய்யம்பாளையம் பகுதிகளில் ஏராளமான நடுகற்கள் எழுப்பபட்டு உள்ளன. இவற்றை பொதுமக்கள் கண்டும், காணாமல் விட்டு விட்டனர்.

நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, வரலாற்று ஆசிரியர் கருப்பையா தலைமையில் மாணவர்கள் ரெங்கராஜபுரம், நெல்லூர் தாமரைக்குளம் கரையில் இருப்பவை நடுகற்கள் என அடையாளம் கண்டனர்.

கற்களின் அமைப்பு: தாமரைக்குளத்தில் உள்ள கல் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் பிரிவில் இரண்டு வீரர்கள் வாள் பிடித்து நின்றும், அவர்கள் அருகில் மூன்று பெண்கள் உடன்கட்டை உயிர் நீத்த அடையாளத்துடன் உள்ளனர். இரண்டாவது பிரிவில் 5 வீரர்கள் வாளுடன் நின்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நாயக்கர் கால கொண்டை அமைப்பு காணப்படுகிறது.

ரெங்கராஜபுரம் நடுகல் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிலும் வாள், கம்புடன் வீரர்கள், தண்டை, நீர்குவளையுடன் பெண்கள் உள்ளனர். கன்னிவாடி ஜமீன் ஆட்சியில் தாமரைக் குளத்து நீரை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க நடந்த சண்டயில் வீரர்கள் இறந்துள்ளனர். அவர்கள் இறந்த பின் மனைவியரும் உடன் கட்டை ஏறி உயிர் துறந்து உள்ளனர்.

அவர்களின் நினைவாக நடுகல் எழுப்பபட்டு உள்ளது என, தேனி மாவட்டம் போடி, சி.பி.ஏ., கல்லூரி பேராசிரியர் மாணிக்கராஜ், கனகராஜ், தொல்லியல் துறை மாணவர் ராம்குமார் துணையுடன் விளக்கினார்.

பேராசிரியர் மாணிக்க ராஜ் கூறுகையில், இப்பகுதியில் ஏற்கனவே வட்ட எழுத்துக்கள், பாறை ஓவியங்கள், வாள் கிடைத்தன. தற்போது நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அரசு இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar