பதிவு செய்த நாள்
22
அக்
2018
11:10
ஷீரடி : ஷீரடி கோவிலில், மூன்று நாட்கள் நடந்த, சாய்பாபா சமாதியடைந்த நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், பக்தர்கள், 5.9 கோடி ரூபாய், காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள அகமது நகர் மாவட்டம், ஷீரடியில், பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு, கடந்த, ௧௭ - ௧௯ வரை, சாய்பாபா சமாதியடைந்த நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி உட்பட, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த மூன்று நாளில் மட்டும், மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். ௫.6 கோடி ரூபாயை, கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது பற்றி, சாய்பாபா அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ரூபால் அகர்வால், நேற்று கூறியதாவது: மூன்று நாட்கள் நடந்த விழாவில் மட்டும், 5.9 கோடி ரூபாய், பக்தர்களிடமிருந்து காணிக்கையாக வந்துள்ளது. இதில், உண்டியல் வசூல், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களும், வெளிநாட்டு பணம், பிரசாதம் வினியோகம் ஆகியவற்றில் கிடைத்த வருவாயும் அடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.