கோவை: கோவை நகர் மற்றும் புறநகரில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் சன்னதிகளில், இன்று மாலை, பிரதோஷ வழிபாடு நடக்கிறது. பிரதோஷம் முன்னிட்டு, இன்று மாலை, 4:30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடக்கிறது.