செஞ்சி: செஞ்சி அடுத்த காரியமங்கலம் கருணா சாயிபாபா கோவிலில் சாயிபாபாவின் 100வது ஆண்டு ஆராதனை விழா நடந்தது. அதனையொட்டி காலை 7:00 மணி முதல் 9:00 மணிவரை கருணா சாயிபாபாவுக்கு பக்தர்கள் நேரடியாக பால் ஆபிஷேகம் செய்தனர். 11:00 மணிக்கு பாபாவுக்கு சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ராஜராஜேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், குங்குமத்தால் அர்ச்னையும் மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.