பதிவு செய்த நாள்
22
அக்
2018
12:10
காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையம் பகுதியில், நாகம்மன் -கல்யாண துர்க்கை கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள, சேர்மன் சாமிநாதன் தெருவில், நாகம்மன் -கல்யாண துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒரு வாரமாக நவராத்திரி விழா நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதலாம் ஆண்டு, 108 திருவிளக்கு பூஜை நடத்த, அப்பகுதிவாசிகள் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, கோவில் வளாகத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. விளக்கு பூஜையில், 108 திருமந்திரம் சொல்ல, பெண்கள் குங்கும அர்ச்சனையுடன், விளக்கு ஏற்றி, அம்மனை வழிபட்டனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர்.