பதிவு செய்த நாள்
23
அக்
2018
11:10
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகேயுள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசுவாமி கோவிலுக்கு, விசேஷ நாட்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் அருகே சோழமாதேவியில், சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசுவாமி கோவில் உள்ளது. மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்த இந்தக்கோவிலை பொதுமக்கள் குழு அமைத்து புதுப்பித்தனர்.கடந்த 2013 ஜனவரி மாதம் கும்பாபிேஷகம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சோழஅரசி நினைவாக உருவான இந்த கிராமம் சோழ(ன்)மாதேவி என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி, சோழமாதேவி என அமைந்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன.ஆயிரம் ஆண்டுகளுக்கு, முன்கட்டப்பட்ட கோவில் சுற்று மதில் மற்றும் உட்புறச்சுவர்களில் கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.சிவராத்திரி, பிர தோஷம், சனிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில், கோவிலுக்கு பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அந்நாட்களில், கோவிலுக்கு சிறப்புபஸ் அல்லது வழக்கமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களை கோவில் வளாகம் வரை சென்று திரும்புவதாக, இயக்கினால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.
இது குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒருகி.மீ.,க்கு அதிக தொலைவில் உள்ளதால், பெண்கள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் சென்று திரும்புவது மிகவும் சிரமமாக உள்ளது.இதனால் விசேஷ நாட்களில் கோவில் வரை சென்று திரும்பும் வகையில் சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்றனர்.