Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விசேஷ நாட்களில் கோவிலுக்கு சிறப்பு ... சபரிமலை தலைமை தந்திரிக்கு வலைதளங்களில் குவியும் பாராட்டு சபரிமலை தலைமை தந்திரிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி
எழுத்தின் அளவு:
செங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி

பதிவு செய்த நாள்

23 அக்
2018
11:10

பல்லடம்: அல்லாளபுரம் ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் மூலஸ்தானம், செங்கல்லில் கட்டப்படுவதற்கு, பக்தர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்லடத்தை அடுத்த கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரத்தில், பிரசித்தி பெற்ற, ஸ்ரீஉண்ணாமுலையம்மன் உடனமர் ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த, 24 ஆண்டுகளுக்கும் மேலாக, கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்களின் தொடர் கோரிக்கையினால், கோவில் புனரமைக்க திட்டமிடப்பட்டு, ஜூன், 9ல் பாலாலயம் நடந்தது. இந்நிலையில், மூன்று மாதங்களாக, கோவில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஸ்ரீஉலகேஸ்வரர் சுவாமி கோவில் மூலஸ்தானம், செங்கல்லில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பக்தர்கள் கூறியதாவது: பழமையான இக்கோவிலை, முறையாக பராமரிக்காமல், அறநிலையத் துறையினர் அலட்சியப்படுத்தி விட்டனர். அதன் காரணமாக, கோவில் சிதிலமடைந்து விட்டது. தற்போது, பொதுமக்களின் பங்களிப்புடன், கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூலஸ்தானம், கருங்கல்லில் கட்டாமல், செங்கல்லில் கட்டுகின்றனர். பழமை வாய்ந்த கோவில்கள் அனைத்தும், கருங்கல்லிலேயே கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனால், அது குறித்து எடுத்து கூறியும், ஏற்க மறுத்து, செங்கல்லில் பணிகளை தொடர்ந்து வருகின்றனர். அறநிலைய துறை அதிகாரிகளின் இந்த செயலை, கண்டிக்கிறோம். கருங்கல்லில் கட்டாவிடில், போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar